Get Nandalaalaa atom feed here!

Saturday, October 08, 2005

நிலநடுக்கம் - மேலதிக தகவல்

ஹி.பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி, இராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பஞ்சாப், ஹரியானாவில் மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. மக்கள் கலவரத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நிற்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தன.

இந்தியாவின் பிரதமர் தலைமையில் அமச்சரவை கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 இலட்சம் உதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது தவிர மீட்பு பணிகள் குறித்து எவ்வித முடிவும் / செயலும் இல்லை. மீட்பு பணிகள் தேவைகள் குறித்து மாநில அரசிடம் கேட்டுள்ளதாக பிரதமர் அலுவலக் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவம் மையம் கொண்டுள்ள கஷ்மீரில் மீட்பு பணிகளில் இன்னும் இராணுவம் ஈடுபடுத்தப்பட வில்லை என்பது வியப்புக்குறிய செய்தி.


பாதிப்புகளை பார்வையிடும் முஷரப் மற்றும் அஜிஸ்.

பாகிஷ்தான் பகுதியில் இராணுவம் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளாதாக தகவல்கள் கூறுகின்றன். பாகிஷ்தான் அதிபர் முஷரப், பிரதமர் அஜிஸ் இருவருமே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பணிமேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பாகிஷ்தான் பிரதமர் அஜிஸ் பாதிப்பு மிக கடுமையானது என்றும், உயிரிழப்பு மிக அதிகமாக இருக்கக்கூடுமென்றும், இது நாடு எதிர்கொள்ளும் சவால் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய அரசு தரப்பில் சேதம் குறித்து குறைவான மதிப்பீடே இதுவரை தரப்பட்டுள்ளது.

பல்லாயிரம் உயிர்கள் பலி.

சமீபத்திய தகவல்கள்:
பாகிஸ்தான் பகுதி கஷ்மீரின் பூன்ச், பரமுல்லா, குப்வரா மற்றும் தலைநகர் முஜபராபாத் ஆகிய பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கிலானோர் உயிரிழந்திருக்க க்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய - பாக் அதிகார எல்லையோர உரி என்ற நகரின் வணிக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சேதக்கடுமைகளை அதிகரித்துள்ளது.

இந்திய கஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமுள்ளது. தற்போது 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் உயிருக்கு போராடுவொர் குறித்து எந்த தகவலும் இல்லை.

பல சாலைகளில் மண் சரிவின் காரணமாக் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, உதவிகள் வந்தடைவதை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் தனது அமைப்பினரை உடனடியாக களமிறக்கி முடிந்தவற்றை செய்து வருகிறது. செஞ்சிலுவை சங்கம 'உரி' யில் 1000 கூடாரங்கள் வரை அமைத்துள்ளனர் எனினும் இது போதுமானதல்ல எனவும்
மேலும் உதவிகள் தேவை என சர்வதேச தலைமையகத்தை கோரியுள்ளனர்.

ஆனால், இரண்டு நாட்டு அரசுகளுமே முழுமையாக களம் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பது வருத்தத்திற்குறியது.

-------------------------------------------------

ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் பகுதிகளில் கடும் நிலநடுக்கம்.
ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் ஆகிய தெற்காசிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது



இது ரிக்டர் அளவையில் 7.6 என்ற அளவில் கடுமையாதாக இருந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே அதிக கடுமையானது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வட கிழக்கே 80 கி.மீ தொலைவில் நில நடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. இதற்கு சுமார் 4 மணி நேரம் முன்னதாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் அக்சய் மாகாணத்தின் தென் பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானில் 1000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இஸ்லாமாபாத்தில் மட்டுமே மிகக்கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய காஷ்மீர் பகுதியின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதுவரை வந்த தகவல்கள் 14 இந்திய இராணுவ வீரர்களும், குழந்தைகள் உள்ளிட்ட 20 நபர்கள் வரை இப்பேரிடருக்கு பலியானதாக கூறுகின்றன.

பூன்ச் மாவட்டத்தில் நீதிமன்ற கட்டடம் ஒன்றும், 200 ஆண்டுகால 'மோத்தி மகால்' என்ற கட்டிடமும் தரைமட்டமானதாக தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்:
உயிருக்கு போராட்டம் இடிபாடுகளுக்கிடையே...




------------------------
WILL UPDATE AS MORE INFO COMINGIN - KEEP CHECK.

Get Nandalaalaa atom feed here!

Tuesday, August 23, 2005

தமிழ்மணம் - 365 : அடுத்த கட்டம்?

தமிழ்மணம் தொடங்கப்பட்டு, தமிழ் வலைபதிவுகளை திரட்டும் பணியினை கடந்த ஓர் ஆண்டாக திறம்பட செய்து வந்துள்ளது பாராட்டுக்குறியது.

ஏறக்குறைய இதே ஒரு வருடங்களாகத்தான் நானும் இணையத்தில் தமிழ் படிக்கிறேன் என்பதும், தமிழ்மணத்தை அதன் ஆரம்ப காலந்தொட்டே உபயோகித்து வருவது குறித்தும் எனக்கு மகிழ்ச்சியே. என்னைப்போலவே பலருக்கும் தமிழ்மணம் சிறந்த வலைகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய பயனுள்ள ஒரு திரட்டியை உருவாக்கி தொய்வின்றி இயக்கி வருவதற்காக காசி, அவருடன் இணைந்து செயல்பட்டு வரும் செல்வராஜ், மதி கந்தசாமி மற்றும் பரிமேழகர் ஆகியொருக்கும் வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக நன்றி.

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சி என்பது இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனினும், வரும் காலத்தில் அது வளர்வதற்கு 'தமிழ்மணம்' திரட்டியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தமிழ்மணம் கடந்த ஒரு வருடமாக கொண்டிருந்த (க நான் நினைக்கும் அதே) நிலைப்பாட்டுடனே இனியும் தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சில நாட்களாக சமயம் சார்ந்த விதயங்களில் ஒருவர் மற்றவரின் கடவுளரைத் தாக்கி எழுதுவது சற்று தரம் தாழ்ந்து வருவதைக் காண நேரிடுகிறது. இத்தகைய பதிவுகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட பதிவுகள் தமிழ்மணம் சேவையிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அத்தகைய நிலைக்கு தள்ளவேண்டாம் என்றும் சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

என காசி தனது பதிவின் இறுதி வரிகளாக எழுதியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இது [இந்திய] சுதந்திர தின கொண்டாட்ட சம்பிரதாயங்களில் ஒன்றாக, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, அரசின் வளர்ச்சிகளை பட்டியலிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்கு உழைத்தவர்களை நினைவு கூர்ந்துவிட்டு, இறுதியாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு தீங்குவிளைக்க நினைப்பவர்க்கு 'இறுதி' எச்சரிக்கை விட்டு தன் அதிகார நிலை நாட்டலுடன் முடித்துக்கொள்ளுவதை நினைவூட்டுகிறது.

இதுவும் அதே தொணியில் உள்ளது வருந்தத்தக்கது.

காசி குறிப்பிட்டுள்ள கடவுள்களை தாக்குவது சில மாதங்களாகவே, வலைபதிவுகளில் நடந்து வருகிறது. இதுவரை (நானறிந்தவரையில்) எதுவும் செய்யாமல் ஓராண்டு நிறைவை ஒட்டிய தனது செய்தியில் அதை கண்டிப்பது என்பது ஏற்க இயலாததாய் உள்ளது.

இப்படி வரையரைகளை - எதை / எப்படி எழுதலாம் / கூடாது என்பதெல்லாம் எளிதில் தெளியக்கூடிய விதயமல்ல.

கருத்துகளில் தரம் என்பதை எது / யார் தீர்மானிப்பது. தனக்கு ஒவ்வாத கருத்துகள் அனைத்தையுமே தரம் தாழ்ந்ததாக ஒருவர் தீர்மானிக்கலாம். அதை திணிக்க முயற்சிப்பது கருத்து வன்முறையாக உருமாற்றம் பெற்றுவிடாதா?

இங்கே கடவுள்களை காக்க முயறசிக்கையில், கடவுள்கள் என்றால் எதெல்லாம் கடவுள் என்பதையும் காசி விளக்க வேண்டியியிருக்கும்.

ஆபிரகாமிய, புராண கடவுள்களுக்கு மட்டும் தான் இந்த பாதுகாப்பா? தொண்டர்களால் கடவுளாக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்துமா? வாழும் கடவுள்களாக சித்தரிக்கப்படும் சகத்குருக்களை தாக்கி எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? ரசினி கடவுள், கமலகாச கடவுள், இளையராசா கடவுள்களின் பக்தர்களின் மனமும் குளிர்விக்கப்படுமா?

இறந்தவர்களை கடவுள்களாக பாவிக்கும் இந்திய பாரம்பரிய தரிசனத்தில் இப்போது உயிர் வாழும் வருங்கால கடவுள்கள் தாக்கப்படுவதும் இனி தடுக்கப்படுமா?

கடவுள்களை அடுத்து இசங்கள் காக்கப்படுமா?

வலதுச்சாரி, இடதுச்சாரி, நடுச்சாரி, தாத்தாச்சாரிகளுக்கு என்ன பாதுகாப்பை காசி வழங்கவிருக்கிறார்?

தமிழ்மணத்தின் உரிமையாளர் என்ற வகையில், இதுபோன்ற எச்சரிக்கைகளை தனது வலைப்பதிவில் வைப்பதும், தமிழ்மணத்தில் திரட்டப்பட எது சரி எது தவறு என்பதை தீர்மானிப்பதும் அவராகவே இருக்க முடியும். அதில் எனக்கு தெளிவுள்ளது.

//சக வலைப்பதிவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்// தன்னையும் சக வலைப்பதிவராகவே இன்னமும் காசி உணர்வது உண்மையாயின் இது பொன்ற முடிவுகளை எட்ட, ஒரு விவாதத்தை ஏற்படுத்தி முடிவு காண முயற்சிப்பதே சிறந்ததாக இருக்க முடியும்.

மாறாக இப்படி எச்சரிக்கைகள் விடுப்பது மணத்தையல்ல கனத்தை வெளிப்படுத்துகிறது.