Get Nandalaalaa atom feed here!

Tuesday, April 19, 2005

இந்தியா, பாகிஸ்தான்: நிகழ்வு - ஒன்று!

நிகழ்வு - ஒன்று: கிரிக்கெட் தொடர்!
வழமையான இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்களைப்போலவே இந்த முறையும் பலத்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது.

பலமான அணி என்ற தோற்றத்துடன் இந்தியாவும், குறைந்த அனுபவத்துடனான இளம் அணியாக பாகிஸ்தானும் களமிறங்கின. அனுமானித்தபடியே டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் ஒன்றை வென்று இந்திய அணி தன் மேன்மையை நிரூபித்தது.

தொடரையே வென்றுவிட்ட பாங்கில் மூன்றாவது மற்றும் இறுதி போட்டியை எதிர்கொண்டது இந்திய அணி. இக்காரணத்தாலெயே வெல்வதற்கு வேண்டிய அழுத்தத்தை கொடுக்காமல், டிரா செய்யும் முனைப்புடனே ஆடியது (குறிப்பாக இறுதி இன்னிங்ஸில்).

தொடரை இழக்கக்கூடிய ஆபத்திலிருந்த பாகிஸ்தான் அணியோ டாஸில் வென்ற அனுகூலத்தை கையகப்படுத்தும் விதமாக, அதிக ஓட்டங்களை (முதல் இன்னிங்ஸில்) எடுத்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. 90% சந்தர்ப்பங்களில் போராடாமல் அழுத்தத்திற்கு சரணடையும் தன்மைகொண்ட இந்திய அணி, இம்முறையும் யாரையும் ஏமாற்றாமல், பாகிஸ்தான் அணியை வெல்ல வைப்பதற்கு வேண்டிய வழியிலேயே விளையாடியது.

இறுதி போட்டியில் வென்றதின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்தது. தொடரை வெல்லவில்லையானாலும், இறுதி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ததால் அனைவரின் பாராட்டுக்கும் உரியதானது பாகிஸ்தான் அணி. தொடரை இழக்கும் தருவாயிலிருது இவ்வெற்றியின் மூலம் மீண்டு வந்தது, பாகிஸ்தான் அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

டெஸ்ட் தொடர் தொடங்கும் போது சமனற்ற நிலையில் இருந்த இரு அணிகளும், ஒரு நாள் போட்டிகள் தொடங்கும் போது சம பலத்துடன் காட்சியளித்தன. இருந்தபோதும் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றதன் மூலம் இந்திய அணியே பலமான அணி என்ற தோற்றம் மீண்டும் உருவானது.

மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றபோதும், வெற்றிக்கு பேட்டிங் + பவுளிங் + பீல்டிங்கை விட டாஸை வெல்வதே பிரதானம் என்ற தோற்றம் ஏற்பட்டது. இதுவரையில் டாஸ் வென்ற அணியே போட்டியை கைப்பற்றியது. ஆனால், நான்காவது போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி தோற்றது.

இரண்டு தொடர் வெற்றியின் மூலம் முன்னணியில் இருந்த இந்திய அணி, இரண்டு தொடர் தோல்வி மூலம் மீதமிருந்த ஆட்டங்களுக்கு சுவை கூட்டியது. இந்த நான்காவது ஆட்டத்தில் தோல்விகண்டிருந்த இந்திய அணிக்கு ஒரே ஆறுதல், ஐசிசி கங்குலியை ஆறு ஆட்டங்களுக்கு விளையாட தடைவிதித்தது மட்டும் தான்.

தன்க்கு எப்போதுமே 'தோல்வி ஒரு தொடர்கதை' என்பதை, ஐந்தாம் ஆட்டத்தைலும் தோற்று நிறுவிய இந்திய அணி, 2-3 என்ற கணக்கில் ஆறாவது மற்றும் இறுதி ஆட்டத்தை எதிர்கொண்டது.(நல்ல வேலையாக டெஸ்ட் தொடர் 3 ஆட்டங்களுடன் முடிந்துவிட்டது).
இப்போட்டியில் வெல்வதின் மூலம் தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கும், தொடரை கைப்பற்றும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கும் இருந்தன.

இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றுவிட்ட இறுதிப்போட்டிக்கு, கூடுதல் முக்கியத்துவம்-இப்போட்டியை காண பாகிஸ்தான் அதிபர் முஷரப் இந்தியா வந்தது. அவரை கவுரவிக்கும் விதமாக, ஓர் அணியாக விளையாடும் வித்தையை கைவரப்பெறாத இந்திய அணியினர், வெற்றியை பாகிஸ்தானுக்கு அளித்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணியினர் டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தும், ஒரு நாள் தொடரை 4-2 என்ற கணக்கில் வென்றும் தாயகம் திரும்பினர்.

இதற்கிடையில், கிரிக்கெட் போட்டியை சாக்கிட்டு இந்தியா வந்த முஷரப், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடன் இரு நாட்டு பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தையை மேற்கொண்டார்.

இதற்கு முன்னரும் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு காலகட்டங்களில் பல முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவையெல்லாம் பலனளித்ததா இல்லையா என்ற கேள்விக்கு - இரு நாட்டு உறவுகளின் இன்றைய நிலையே பதில் கூறும்.

இருந்தபோதும், இம்முறை நடந்த பேச்சுவார்த்தை, முன்னெப்போதையும் விட, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று - இரு நாடுகளுக்குமே.
எப்படி?
அடுத்த பதிவில்....

1 Comments:

At Wed Apr 20, 05:09:00 PM 2005, Anonymous Anonymous said...

//தனக்கு எப்போதுமே 'தோல்வி ஒரு தொடர்கதை' என்பதை, ஐந்தாம் ஆட்டத்தைலும் தோற்று நிறுவிய இந்திய அணி//

ஜெயித்துக்கிட்டிருக்கும் போது பாராட்டிருக்கீங்களா?

 

Post a Comment

<< Home