Get Nandalaalaa atom feed here!

Sunday, April 24, 2005

ஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.

Image hosted by TinyPic.comமோசமாகும் அண்டை நாட்டு உறவுகள் - ஜப்பான்.



ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி ஜப்பானின் போர்க்கால கொடூரங்களுக்காக மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஜகர்தா வில் கூடிய 120 நாடுகளின் ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் நேற்று (வெள்ளி, 22-ஏப்) உரை நிகழ்த்தும் போது இதைக்குறிப்பிட்டார்.

ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு: ஏப் 18 : ஏப் 24, 1955ல் இந்தோனேசிய பன்டுங் நகரில் கூடியது ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் முதல் மாநாடு. நேரு ஆசியா ஆப்ரிக்க கூட்டமைப்பின் முதல்மாநாட்டில்
அவ்வகையில் இப்போது நடப்பது பொன் விழா ஆண்டு கூட்டம். அன்று அங்கே கூடியது மூன்றாம் உலக நாடுகள் எனப்படும் அமெரிக்க சோவியத் அணிகளில் இல்லாத நாடுகளின் தலைவர்கள். அப்போதைய மாநாட்டில் வல்லரசுகளுக்கு இணையாக வளரும் நாடுகளின் உரிமை காப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. (பனிப்போர் கால) சோவியத், மேற்குலக ஆதிக்கத்தை ஒரு சேர நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக அமைதி மற்றும் அனைத்து நடுகளுக்கிடையேயான் ஒத்துழைப்பு முன்னிறுத்தப்பட்டது. சீனா குறித்த ஐயம் ஏனைய நாடுகளுக்கு தீர்ந்தும், சீனாவுக்கு பிற நாடுகளுடனான புது உறவு ஏற்பட்டதும் அப்போதிருந்து தான். அன்றைய இந்திய பிரதமர் நேரு இத்தகைய ஒருங்கினைப்புக்கு மிக முக்கிய பங்காற்றினார். அவரின் பஞ்ச சில கொள்கை (உலக அரங்கில்) இம்மாநாட்டில் தான் முதலில் அரங்கேறியது. (இதற்கு முன்பே இக்கொள்கையை சீனா ஏற்றுக்கொண்டு, இந்தியாவுடன் கைச்சாத்திட்டது, ஏப் 1954) முதலில் சீனாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் உலகளவில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு அடிப்படை திட்டம் என்ற பெருமையை பெற்றது. இம்மாநாட்டின் தொடர்ச்சியாகவே 1961 ல் அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு NAM(Non Align Movement). தொடங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு NAM தேவை அற்றுப்போக, ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கான அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆக NAM உருவான பின் அரசியல் முக்கியத்துவம் இழ்ந்த இவ்வமைப்பு மீண்டும் இப்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.


கொய்ஜுமி "ஜப்பான் காலனியாதிக்கத்தின் மூலமாக கடும் கொடுமையினையும், அந்நாடுகளின் மக்களுக்கு மாற்றமுடியா இடர்பாட்டினையும் ஏற்படுத்தியது" என்று வருந்தியுள்ளார். "இதயத்தின் ஆழ்த்திலிருந்து" மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இம்மாநாட்டில் உரையாற்றிய கொய்ஜுமி, "ஜப்பானுக்கு எதிரான எண்ணம் (சீனாவுக்கு) உள்ளபோதும் நட்புறவே முக்கியம்" என்று சீனாவுக்கு தெரிவித்துள்ளார். சீன பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

[கடைசி செய்தி: ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி, சீன அதிபர் ஹு ஜின்தவ் சந்திப்பு இன்று நடந்துள்ளது. முடிவில் இரு பக்க கோரிக்கைகளும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன. வேறு தீர்வு எதுவும் ஏட்டப்பட்டதாக தெரியவில்லை. ஜப்பானை பொருத்தமட்டில் அது திறந்த மனத்துடனே இருப்பதாக நிருவ மேலும் ஒரு அத்தாட்சி. அவ்வகையில் ஜப்பானுக்கு இது அரசியல் ரீதியிலான வெற்றி.]

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம், ஆப்ரிக்க நாடுகளுக்கான ஜப்பானின் நிதி உதவியை 1.6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துதல் ஆகியன அவர் பேச்சின் மற்ற முக்கிய அங்கமாகும்.


இப்படி ஒரு ஜப்பானிய பிரதமர் பேசுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்பே 17 முறை ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. இது 18 வது முறை, அவ்வளவே. ஆனால் இப்போதய கால சூழல் மிக முக்கியமானது. ஒன்று ஜப்பான் மற்றும் சீன கொரிய நாடுகளுக்கிடையேயான தற்போதய சச்சரவு நிலை. இரண்டு ஜப்பானின் ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் இருக்கைக்கான உரிமை கோரல். (அதற்கான தடை அகற்றல்)

இத்தகைய அழுத்தமான, நிச்சயம் ஆறுதல் அளிக்கக்கூடிய வார்த்தைகளை அனைத்து பாதிக்கப்பட்ட நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக ஜப்பானின் உள் நோக்கம் குறித்த ஐயப்பாட்டினையே அவை இன்னமும் கொண்டிருக்கின்றன.

சீன வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் கொங் குவன் "வருத்தம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அது செயலில் இருக்க வேண்டும்" என்கிறார். இதையே சீனாவின் மன நிலையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர் சொல்லும் செயல் என்பது பாட புத்தகம், யஸுகுனி ஆலயம் சம்பந்தப்பட்டது என்பதை அனைவரும் யூகிக்கலாம். இது தவிர்த்த இவ்விரு நாட்டுக்கிடையேயான எல்லை பிரச்சனை, தய்வன் ஆகியவை இரு தரப்புமே இணங்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய, இதில் சமபந்தப்படாத தனி விஷயம். (எல்லை பிரச்சினை, தய்வன் பற்றி தனியே எழுதவேண்டும்)

முரண்பாடு:
ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி, கடந்த காலத்திய தவறுகளுக்காக கொய்ஜுமி மன்னிப்பு கேட்ட அதே நாளில், 50 ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பருவகால விழாவை முன்னிட்டு யஸுகுனி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். (119 உறுப்பினர்கள் என்றும், ஜப்பானிய உள்துறை அமைச்சரும் அடக்கம் என்று இதுவரை ஊர்ஜிதமாகாத தகவல்)

இப்படியான முரண்பட்ட செயல் மூலம் ஜப்பான் குறிப்புணர்த்துவது என்ன?

ஜப்பான், தனது முன்னாள் பிரதமரை,(ஹிடொகி டொஜொ) போர்க்கொடுமைகள் புரிந்து, பின்னாளில் போர்க்குற்றவாளியாக மரண தண்டனை பெற்ற ஒருவரை, நாட்டை காக்கும் வீரன் என தொடர்ந்து வழிபடும்.

தானே கற்பித்துக்கொண்ட இனப்பெருமையினால், தான் மனித இனத்திற்கு இழைத்த கொடுமைகளை, ஜப்பானிய வருங்கால சந்ததியினர் அறிந்து, அவர்கள் குற்ற உணர்வு கொள்வதை தவிர்க்க, அந்நிகழ்வுகள் குறித்த உண்மைகளை படிப்படியாக அவர்களிடமிருந்து மறைக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

அதன் பின்னர் ஜப்பானிய சந்ததியினர் ஹிடொகி டொஜொ வை கடவுளாகவும், அவர் மற்ற இனங்களின் மேல் நடத்திய வன் கொடுமைகளை தேச நன்மைக்கானது என்றும் ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும்.

[அந்த சூழலில் உருவாகும் வருங்கால ஜப்பானிய சமூகம் எப்படிப்பட்ட பாதிப்பை உலகின் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் எனபது யூகத்திற்குறியதே]

ஆனல் மற்ற நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க வரும் போதுமட்டும், ஜப்பான் 18 முறை உருக்கமாக மன்னிப்பு கோரும். (கொய்ஜுமி யே இதுவரை இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார்! ஆனால் அவரின் யஸுகுனி ஆலய வழிபாட்டை தவறென்றோ, இனி அங்கே போகாதிருப்பது குறித்தோ இதுவரை அவர் எதுவும் சொல்லவில்லை. எனவே அவர் தொடர்ந்து யஸுகுனி ஆலயத்தில் - ஹிடொகி டொஜொ விடம் - உலக அமைதிக்காக பிரார்த்திக்க செல்வது தொடரக்கூடும்)


கொய்ஜுமியின் இப்போதைய பேச்சின் உண்மை நோக்கம், ஜப்பான் ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர் ஆவது மட்டுமே. அதற்கான தடைகள் ஏற்படாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். எனவே, சீனாவையும் கொரியாவையும் சமாதானப்படுத்திவிட்டு, தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவே இந்த பேச்சளவிலான முயற்சிகள்.


ஜப்பானின் இச்செயல்களை ஒப்பு நோக்க வேண்டுமானால் அது ஒரு கற்பனையின் மூலம் சாத்தியப்படலாம். உதாரணமாக ஜெர்மன் ஹிட்லர் கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்த விடயம். ஒரு வேலை ஜெர்மன் ஹிட்லரை தனது தேசத்தின் நிர்மான கர்த்தாவாக அல்லது தன் நாட்டுக்குழைத்த ராணுவ வீரர்கள் வரிசையி கவுரப்படுத்தினால் அல்லது யஸுகுனி போல ஓர் ஆலயத்தை நிர்மானித்து அதில் ஹிட்லரை சேர்த்தால், இவற்றில் ஏதாவது ஒன்று நடந்தால் எதிர்வினையாக என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஆனால் இப்போது சம்பந்த பட்ட நாடுகளை தவிர மற்றவர்கள் வாளாதிருப்பது எதனால்?

இதுவரை எந்த கண்டனமும் வெளியிலிருந்து வராதது எப்படி?

ஜப்பான் மன்னிப்பு கேட்டதை ஜப்பானின் தயாள குணமாக பார்த்து அதை பாராட்டவும் முடிவதின் பின்னணி என்ன?

இதையே சீனா ஏற்று அமைதியாகிவிட வேண்டும் என சிலர் எப்படி நினைக்கிறார்கள்?

இப்போதும் ஜப்பான் சீனாவில் நடக்கும் கலவரங்களுக்கு சீனாவிடமிருந்தே மன்னிப்பை கேட்பதும், அதற்கும் ஆதரவு கிடைப்பதும் எப்படி?

[ஐநா செயலர் அனன் தெரிவித்த கருத்து கூட பொருளாதாரத்தை முன் வைத்து, ஜப்பானிய உணர்வுகளையே பிரதிபளிப்பதாக உள்ளது]

இப்படி யாருக்குமே எந்த கருத்தும் இல்லாமல் போனது விந்தை தான்.
(தொடரும்)

2 Comments:

At Sun Apr 24, 01:16:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

//இப்போதும் ஜப்பான் சீனாவில் நடக்கும் கலவரங்களுக்கு சீனாவிடமிருந்தே மன்னிப்பை கேட்பதும், அதற்கும் ஆதரவு கிடைப்பதும் எப்படி?//

கலவரங்கள் = எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்று திருத்தி வாசிக்கவும்.
தவறுக்கு மன்னிக்கவும்.
நன்றி,
நந்தலாலா.

 
At Sun Apr 24, 01:20:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< Home