Get Nandalaalaa atom feed here!

Tuesday, July 12, 2005

எருமைகளுக்காக கொல்லப்பட்ட மூன்று தலித்துகள்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியை தொடர்ந்து, கண்டதேவியிலும் தலித்துகளின் குமுக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியில், தலித்துகளுக்கு எதிரான உச்சகட்ட அநியாயம் ஒன்று நடந்தேறியுள்ளது. அவர்களின் உயிர் வாழும் உரிமையே இப்போது(ம்) கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

எருமை மாடுகளை திருடியதாக குற்றம் சாட்டி, தந்தை இரு மகன்கள் உள்ளிட்ட மூன்று தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், ஹிந்துக்களின் புனித நகரான, கும்பமேலா புகழ் உஜ்ஜைனி மாவட்டத்தின் கிராமமொன்றில் நடந்துள்ளது.

இதை அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பண உதவி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்செயலை புரிந்தமைக்காக உயர் சாதியினர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

அதே சமயம், அப்பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க - தலித்துகளின் எதிர்வினையிலிருந்து உயர்சாதியினரை காக்க என வாசிக்கவும்- அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலித்துகளுக்கு தனிக்குவளை, சுடுகாடு மட்டுமல்ல, தனி (நடைமுறை) அரசியல் சட்டம், குற்றவியல் சட்டங்களும் உண்டு. ஆனாலும், எல்லோரும் ஹிந்துக்கள், ஹிந்தியர்கள்.

தினமணியில் இச்செய்தி

10 Comments:

At Tue Jul 12, 05:21:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

test

 
At Tue Jul 12, 01:23:00 PM 2005, Anonymous Anonymous said...

//தலித்துகளுக்கு தனிக்குவளை, சுடுகாடு மட்டுமல்ல, தனி (நடைமுறை) அரசியல் சட்டம், குற்றவியல் சட்டங்களும் உண்டு//
practically yes.

 
At Tue Jul 12, 01:36:00 PM 2005, Anonymous Anonymous said...

இது வருந்தத்தக்கது.. குற்றமிழைத்தவர் எவராயினும் கண்டிப்பாகத் தண்டிக்கப் படவேண்டும்.. அது சரி எங்கே போய்விட்டனர் புலிப்பாண்டி, நேச குமார், ஆரோக்கியம் , பிலிம் காட்டும் ஈரோடு இவர்கள் எல்லாம்? தலாக்கா, இசுலாமியப் பெயர்கள் உள்ளனவா குதி உள்ளே என்று வரிந்து கட்டிக் கொண்டு வருவார்களே.. தலித்துகளைப் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை? சரிதான்.

 
At Tue Jul 12, 02:57:00 PM 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

It is not just the mentality of the so called upper caste as the people in power (read, govt. officials, police etc) are hand in glove with the perpetrators of such heinous crimes.

 
At Tue Jul 12, 03:02:00 PM 2005, Anonymous Anonymous said...

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதாம்.

 
At Tue Jul 12, 03:04:00 PM 2005, Anonymous Anonymous said...

தனிச்சட்டம் பற்றியெல்லாம் யார் யார் பேசுறதுன்னு விவஸ்தை இல்லாம போய்டிச்சி

 
At Tue Jul 12, 04:59:00 PM 2005, Anonymous Anonymous said...

//நனையுதுன்னு ஓநாய் அழுதாம்.//
அதானே நரியும் நாயும் அடிச்சு தின்ன இருக்கும்போது ஓநாய்க்கு என்னப்பா வேலை.

 
At Tue Jul 12, 05:59:00 PM 2005, Anonymous Anonymous said...

கருட புராணத்தில் சொல்லப் பட்ட தண்டனைகள் சூத்திரர்களுக்கு மட்டுமே! பார்ப்பானில் எவனாவாது சாப்பாட்டுக்கு சிங்கி அடித்தவனைப் பார்க்க முடியாது.

பாவம், இன்னும் தலித்துக்கள் பார்ப்பனிய வெறிநாய்களிடம் கடி பட்டு போராட வேண்டியுள்ளது.

மனிதனை எருமையை விட கீழாக மதிக்கும் மதம் தேவையா என சிந்திக்க வேண்டும் தலித் சகோதர/சகோதரிகள். ஆழ்ந்த வருத்ததுடன்...

 
At Tue Jul 12, 06:17:00 PM 2005, Anonymous Anonymous said...

//அதானே நரியும் நாயும் அடிச்சு தின்ன இருக்கும்போது ஓநாய்க்கு என்னப்பா வேலை.//

அதானே ஓநாய்க்கு - நரியும் நாயும் அடிச்சு தின்ன இருக்கும்போது அங்கே என்னப்பா வேலை.

 
At Sun Jan 13, 05:20:00 AM 2019, Blogger اخبار المملكة said...

شركة تسليك بالاحساء

 

Post a Comment

<< Home