எது உண்மை? சதியா? தற்கொலையா?
கடந்த சில தினங்களாக ஊடகங்களில், உத்தரபிதேசத்தை சேர்ந்த ராம்குமாரி என்பவரின் மரணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனைத்து ஊடகங்களும், ஒரே விதமாக, ராம்குமாரி தானே வலிய சென்று தன் கணவனின் பிணம் எரியும் சிதையில் விழுந்து "தற்கொலை" செய்து கொண்டார் என்றே எழுதிவருகின்றன. உத்தரபிதேச அரசும் அவ்வாறே கூறி வருகிறது.
அவரின் குடும்பத்தாரும், ராம்குமாரியின் கணவர் ஜோகேஷ்வர் திவாரியின் சிதைக்கு தீ வைத்துவிட்டு வந்தபின்பு, அவரை காணாமல் தேடியபோது, அவர் ஏறக்குறைய முழுதாக எரிந்த நிலையில் கணவரின் சிதையில் கிடப்பதை கண்டுள்ளனர்.
இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் செய்தி தெரிவிக்க சென்ற ராம்குமாரியின் மகனை, அங்கிருந்த காவலர்கள், புகாரை பதிவு செய்யாமல் விரட்டி விட்டதாகவும், இது பற்றி வெளியே தெரிவிக்க கூடது என மிரட்டியதாகவும், பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.
இம்மாதம் 7ம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ள போதும், அதுபற்றிய செய்தி எதுவும் உடனடியாக வெளியே தெரியவில்லை.
இறந்தவர்களின் 13ம் நாள் நினைவை கொண்டாடும் விதமாக, வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தேங்காய், பூ, ஊதுவத்திகளுடன் சதி நிகழ்ந்ந்த இடத்தில் சதி மதா வழிபாடு செய்யத்துவங்கினர்.
உத்தரபிரதேச ஆளும் கட்சியான சமஜ்வாடி ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரும், மாநில முன்னாள் அமைச்சரும் ஆன ஜமுனா பிரசாத் போஸ் என்பவர் சதி மாதா ஆலயத்திற்கு சென்று, சிதையை சுற்றி வந்து வழிபட்டு, பின்னர், பிணம் எரித்த சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றுள்ளார்.
இப்படியாக பரபரப்பான சம்பவங்கள் நடக்க துவங்க, இச்சம்பவம் ஊடகங்களின் கவனத்தை பெற்று, இந்த வாரம் தான் வெளியுலகிற்கு செய்தியாக வெளியாகியது.
அதை தொடர்ந்து செயலில் இறங்கியுள்ள உத்தரபிரதேச அரசு, சதி நடந்த இடத்தில் பூஜைகள் நடத்துவதை தடை செய்து, அங்கே அதிக எண்ணிக்கையிலான காவலர்களை நிறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், உத்தரபிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
மாநில காவல்துறையின் உயர் அதிகாரி வி எஸ் பாண்டே, "இது சட்டப்படி சதி என்ற வரையரைக்குள் வராவிட்டாலும் கூட, மாவட்ட காவல் கண்கானிப்பாளரை நேரடி விசாரணையை மேற்கொள்ளும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சதிக்கு தூண்டுதல் மற்றும் சதியை போற்றுதல் இரண்டும் சட்டப்படி தவறு. ஆனால், ராம்குமாரி மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் உடன்கட்டை ஏறவில்லை, தானாகவே சென்று சிதையில் விழுந்துள்ளார். எனவே இது சட்டப்படி சதி இல்லை. இப்போது இதை சதியாக போற்றி நடத்தப்படும் பூஜைகள் தடுத்து நிறுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி பற்றி மாவட்ட நீதிபதி தீரஜ் சாகு கூறுகையில், "இது நிச்சயம் சதி தான், ஆனால் ராம்குமாரி யாருடைய பலவந்தம் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் உடன்பாட்டுடனோ இதில் ஈடுபடவில்லை. இந்நிகழ்விற்கு நேரடி சாட்சியமும் இல்லை எனவே யார் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது" என்கிறார்.
மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் ஜாக்கி அஹ்மட், "இந்நிகழ்ச்சி சாதாரண தற்கொலை தான். ஊடகங்கள் பரபரப்புக்காக, அளவுக்கு அதிகமாக இதை பெரிது படுத்துகின்றன" என்கிறார்.
ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து, ராம்குமாரி, தன் கணவர் இறந்துவிட்ட சோகத்தில், தான்னை மாய்த்துக்கொள்ளும் முடிவுடன், மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, எறிந்து கொண்டிருந்த தன் கணவனின் சிதையில் விழுந்து, தன்னுயிரை போக்கிக்கொண்டுள்ளார். ஆக இது ஒரு தற்கொலை மட்டுமே. சதி என்கிற, அரசின் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மதச்சடங்கல்ல என்று முடிவுக்கு வருமுன், சற்று பொறுங்கள்.
(தொடரும்)
3 Comments:
இப்பதிவை எழுதியதற்கு நன்றிகள். தொடருங்கள்
நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
Do write more on this. thanks nandalala.
Post a Comment
<< Home