Get Nandalaalaa atom feed here!

Tuesday, May 10, 2005

தலாக்…தலாக்…தலாக்!

இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண வரைவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, வரவேற்றும், ஏமாற்றம் தெரிவித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, குமுக சிந்தனையுடைய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அமைப்புகள் ஏமாற்றக்குரலையே எதிரொலிக்கின்றன.

இந்த வாரியத்துக்கு எவ்விதமான, சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லையென்பதையும், இஸ்லாமிய சட்ட முறைக்கு விளக்கம் கூறும் ஒரு (பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு) அமைப்பாக மட்டுமே செயல் பட்டு வருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

போபாலில் கூடிய, முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் 18வது கூட்டம், சில சிறப்புகளை கொண்டிருந்தது.

1. இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லீம்கள், தங்களுக்கென தனியான ஒரு சட்ட வாரியம் அமைப்பது குறித்து பேசி வரும் வேளையில், இக்கூட்டத்தில் பங்கேற்க ஷியா முஸ்லீம் தலைவர்களையும் அழைத்திருந்தது;

2. மாதிரி நிக்காநாமா வடிவைக்கப்படும் என்ற அறிவிப்பு, இஸ்லாமிய திருமண நடைமுறையில் உள்ள குறைகளை களையக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு;

3. மேலும், இஸ்லாமிய குமுகத்தினரிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் பல பிற்போக்கு வழக்கங்கள் கண்டிக்கப்படும், அவற்றுக்கு ஒரு மாற்று முன் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு;

இத்தகைய எதிர்பார்ர்ப்புகளுக்கு, இக்கூட்டத்தின் தொடக்க நாள் நிகழ்ச்சியிலேயே, பலத்த அடி கிடைத்தது.

இந்த அமைப்பின் தலைவர், மௌலானா ராபெ ஹஸ்னி நடாவி, தனது துவக்க உறையில், குடும்ப கட்டுப்பாடு என்பது, இஸ்லாத்தின் பார்வையில் தவறு என அறிவித்தார்.

::உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களை பற்றி கவலை கொள்ள நானிருக்கிறேன்:: என்ற அல்லாவின் வசனத்தை கூறி, இந்திய இஸ்லாமியர்களின் வறுமைக்கு, அதிக குழந்தைகளை கொண்ட இஸ்லாமிய குடும்பம் காரணம் என்ற கருத்தை மறுத்தார்.

வறுமையால், தகுந்த மருத்துவ சிகிச்சையின்றியும், பசியாலும் வாடி இஸ்லாமிய குழந்தைகள் மரணமடைவதை, நியாயப்படுத்தவும் அல்லாவின் வேறொரு வசனம் நடாவிக்கு தெரிந்திருக்க கூடும்.

[இவ்வமைப்பின் துணைத்தலைவர், மௌலானா சையத் கால்பே சாதிக் சென்ற ஆண்டு, குடும்ப கட்டுப்பாடுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து, இஸ்லாமிய தலைவர்களின் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது]

இஸ்லாமிய சட்டங்கள், கருத்தரிப்பை தவிர்க்கும் தற்காலிக முறைகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆணுறை, கருத்தடை மருந்து உட்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும். ஆனால், கருக்கலைப்பு, மலடாக்கும் அறுவை சிகிச்சை ஆகியன இஸ்லாத்துக்கு எதிரானதாக நோக்கப்படுகிறது.

இஸ்லாமிய திருமண நடைமுறையில், வரதட்சனைக்கு இடமில்லை. மாறாக ஆண் தான் மணம் செய்யும் பெண்ணுக்கு மெஹர் என்ற மணத்தொகை அளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்திய முஸ்லீம்கள் மத்தியிலும் வரதட்சிணை முறை புரையோடியுள்ளது என்பதே உண்மை. வரதட்சணை கொடுமை இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை என்பது உண்மைக்கு மாறான தகவல் மட்டுமே. மற்ற எல்லா சமூகங்களைப் போலவும் இஸ்லாமியரிடையேயும் இப்பழக்கம் உள்ளது. இதையொட்டி, வரதட்சனையை கண்டித்துள்ளதுடன், மெஹர் தொகை வழங்குவதற்கு கால அளவையும் நிர்னயம் செய்துள்ளது.

போபால் கூட்டத்தின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்ட மாதிரி நிக்காநாமா எனும், இஸ்லாமிய திருமண வரைவு இவற்றை கொண்டிருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

அதில்,
பல தார மணத்திற்கு கன்டனமோ தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, தன்னை மணமுடித்தபின், தன் கணவன் மற்றொரு மணம் புரிவதை தடுக்க, ஒரு ஒப்பந்தந்தை நிக்காநாமாவில் அப்பெண் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது எந்தளவு கடைபிடிக்கப்படும் என்பதும், பலனளிக்கும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய ஒரு ஒப்பந்தம் மீறப்பட்டால், ஆணுக்கு என்ன தண்டனை என்பதோ, பெண்ணுக்கான பதுகாப்பு குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்த ஒப்பந்தம், பேணப்படுவதையும், மீறப்படுவதையும் கண்கானிக்கப்போவது, அவர்கள் வாழும் பகுதியிலுள்ள ஜமாத் எனும் அமைப்பு. அது முழுக்க முழுக்க ஆண்களை மாத்திரமே கொண்ட ஒரு அமைப்பாகும். இதனிடமிருந்து பெண்களின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான தீர்வு கிடைக்குமா என தெரியவில்லை. இந்த ஜமாத்துகளின் ஆணாதிக்க, பெண்கள் விரோத போக்கு குறித்து, புதுக்கோட்டை STPES அமைப்பின் நிறுவனர் தாவுத் செரிபா கனம் என்ற முஸ்லீம் பெண் ஆர்வளர் சமீபத்தில் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குழந்தைகள் மணம், அதாவது ஆறு, ஏழு வயது பெண்களை மணம் முடிக்கும் வழக்கம் இக்குமுகத்தில் இல்லாவிட்டாலும், பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட பெண்களை (பருவமடைந்த) மணம் முடிக்கும் வழக்கம் இந்திய இஸ்லாமியரிடையே பரவலாயிருக்கிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படாதது வருத்தத்திற்குறியதே.

இறுதியாக, இஸ்லாமிய மண முறிவு முறை பற்றியது.

இஸ்லாத்தில், மணமுறிவு வழங்கும் அதிகாரம், ஆணுக்கு மட்டுமே உள்ளது. பெண்ணுக்கு ஆணைப்போல அதிகாரமல்ல, அடிப்படை உரிமைக்கூட மறுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கணவனிடமிருந்து, மணமுறிவை யாசித்து பெறும் நிலையே இஸ்லாமிய பெண்களுக்கு உள்ளது.

நடாவி இதை நியாயப்படுத்தி, ஆண், பெண் இருவருக்கான உரிமைகளை அல்லாவே வரையறுத்துள்ளதாக கூறுகிறார். மேலும், ஆண்களுக்கு அல்லாவால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் உரிமையானது, அவர்களின் அதிகப்படியான பொறுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

ஒரு கணவன் தன் மனைவியை விலக்க தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும் என்பது இனியும் நீடிக்கும். ஆனால், மூன்றையும் ஒரே நேரத்தில் சொல்வது மட்டுமே இப்போது கண்டிக்கப் பட்டுள்ளது.

மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு, கணவனிடமிருந்து உதவி பெறுவதற்கு(ஜீவனாம்சம்) இஸ்லாத்தில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு காரணமாக, திருமணத்தின் போது மணமகனால், மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் மெஹர் என்ற தொகை ஈடாக சொல்லப்படுகிறது.

ஆனால்,மஹர் என்பது, நடைமுறையில் வழங்கப்படும் தொகை மிக குறைவானது, அல்லது அப்படி ஒரு தொகையை திருமண ஒப்பந்தத்தில் எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டு பின் வழங்கப் படுவதில்லை, அல்லது வழங்கப்பட்டும், கணவனால் பிற்காலத்தில் அத்தொகை கைக்கொள்ளப் படுகிறது. இதற்கு மாறாக சொற்ப எண்ணிக்கையில் சிலர் இருக்கலாம்.

இந்நிலையில் தலாக் என மூன்று முறை கூறி ஒரு பெண்ணை நிர்கதியாக்கும் கணவனுக்கு உள்ள வசதி, பெரும்பாலும், தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தலாக் முறை, முஸ்லீம்களால் பின்பற்றப்படும் வேதநூலான குரானில் சொல்லப்பட்ட முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனாலேயே பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளால் இந்த முறையை தடை செய்ய முடிந்துள்ளது. இந்திய இஸ்லாமியர்களிடையே இன்னும் அந்த துணிவு வராமையும், பழமை நோக்கும், பெண்ணியம் குறித்து பிற்போக்கு நிலையே நீடித்து வருவது வருந்தத்தக்கது.

வறுமையும், குறைவான கல்வி அறிவையும் கொண்ட பிற்பட்ட நிலையிலுள்ள இந்திய இஸ்லாமிய குமுகாயமானது, பெண்ணுரிமையை மறுப்பதன் மூலம், மேலும் தன்னை பின் தள்ளிக்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும்.

மதங்கள் பெயர்களாலும், சடங்குகளாலும் மாறுபட்டுள்ளதே தவிர, பிற்போக்குத்தனங்களை தாங்கி பிடிப்பதில் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவே உள்ளன.

வெகு விரைவில் இந்திய இஸ்லாமிய குமுகாயம், பலதார மணத்திற்கும், தலாக் மூலம், ஒரு தலை பட்சமாக பெண்களை மணவிலக்கி நிர்கதியாகுவதற்கும், இறுதியாக ஒரு முறை 'தாலாக் தலாக் தலாக்' சொல்ல வேண்டும். இதன் மூலமே தன்னை சார்ந்த பெண்களுக்கும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதாக இருக்க முடியும்.

75 Comments:

At Tue May 10, 10:39:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

This post has been removed by a blog administrator.

 
At Tue May 10, 11:41:00 AM 2005, Blogger Voice on Wings said...

நல்ல அலசல், சில விவரங்கள் தவறாக இருந்தாலும். 'தலாக்' முறை விவாகரத்து இருபாலாருக்கும் உள்ள ஒரு உரிமையென்றே நானறிந்த வரையில் தெரிகிறது. மேலும், பெண்களுக்கு சொத்துரிமை, திருமணங்களில் சீதனமின்மை போன்ற அம்சங்களால் இந்து மதத்தை விட பெண்களுக்கு அதிக உரிமை தரும் ஒரு சமயமாகவே எனக்குப் படுகிறது. 'தலாக்' உச்சரிப்பும் ஒரு மதத்தலைவர் முன்னிலையில் கூறினாலே செல்லுபடியாகுமென அறிகிறேன். தோன்றும்பொழுது 'தலாக்' என்று விட்டு கைகழுவி விடமுடியாது.

எனக்கு விந்தையாக இருக்கும் ஒன்று - இஸ்லாத்தில் பெண்ணுரிமையில்லை என்று இஸ்லாமிய பெண்களை விட மற்றவர்கள் அதிகம் குறைபடுவதைப் போல் தெரிகிறது.
எனக்குத் தெரிந்த இஸ்லாமிய பெண் நண்பர்கள் யாரும் பெரிதாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. உண்மையிலேயே நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள். அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.

 
At Tue May 10, 12:19:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

//உண்மையிலேயே நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள்//
இதோ பொங்கியெழுந்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மும்பையில் நடந்த 12 பெண்கள் அமைப்பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில், ஹுக்கு-கே-நிஸ்வன் என்ற அமைப்பின் முஸ்கான் என்ற பெண் AIMPLBன் மாதிரி நிக்காநாமா " இரண்டாந்தர குடிகளாக பார்ப்பதால் பெண்கள் இதை ஏற்க மாட்டோம்" என்று கூறி, நிக்காநாமா காகிதங்களை கிழித்தெறிந்திருக்கின்றார்.

அதில் பங்கேற்ற சில பெண்கள், அவர்கள் சந்திக்கும் கொடுமைகளையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

//போன்ற அம்சங்களால் இந்து மதத்தை விடபெண்களுக்கு அதிக உரிமை தரும் ஒரு சமயமாகவே எனக்குப் படுகிறது//

எந்த ஒன்றையும், அதற்கு கீழான ஒன்றுடன் ஒப்பிடலாம். கீழான ஒன்று இருப்பதினாலேயே மற்றது சிறப்பானது என்று ஆகி விடாது.

//'தலாக்' உச்சரிப்பும் ஒரு மதத்தலைவர் முன்னிலையில் கூறினாலே செல்லுபடியாகுமென அறிகிறேன். தோன்றும்பொழுது 'தலாக்' என்று விட்டு கைகழுவி விடமுடியாது//

அது இஸ்லாமிய சட்டங்களின் படி சரியானதாக இருக்கக்கூடும்.
ஆனால் நடைமுறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதே உண்மை.
பெண்ணின் சம்மதமின்றியே, வெளிநாட்டிலிருக்கும் கணவன் தொலைபேசியில் தலாக் கூறி மணமுறிப்பதும் நடந்து வருகிறது.

//அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.//

இது ஆதிக்க வெறியர்களின் வழமையான குரல். பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் தலையிட கூடாதென்பது, பாதிப்புக்கு உள்ளாக்குவோரின் சுயநலம் மட்டுமே இத்தகைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இப்படி சொல்பவர்கள் பாதிப்படையும் பெண்களைவிட, அதை நிகழ்த்தும் அமைப்பை பாதுகாக்க நினைப்பவர்கள்.

இது தனிப்பட்ட மதத்தினுடைய சீர்கேடு மட்டுமல்ல. ஓட்டு மொத்த பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. இதில் யார் பேசுவது, அல்லது யார் பேசக்கூடாது எனும் தீண்டாமக்கு இடமில்லை.

 
At Tue May 10, 02:01:00 PM 2005, Blogger Voice on Wings said...

என்னை ஆதிக்க வெறியனென்று அடையாளம் காட்டியதற்கு நன்றி :)

நான் கூறியது எனக்குத் தெரிந்த அளவில், மதரீதியான விதிமுறைகளைப் பற்றி. நடைமுறையில் அவை வேறுபடுகின்றன என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்தால் அது நலமே. (எனக்குத் தெரியாது)

பொங்கியெழுகிறார்களென்றால் அதுவும் நன்றே. எழுந்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ச்சியடையட்டும், பெறக் கூடிய உரிமைகளைப் பெறட்டும். இன்றளவில் ஏதோ அரசல் புரசலாக ஆங்காங்கே சில ஓசைகள் மட்டுமே கேட்கின்றன. அவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு என்னால் இயலாது.

Regarding who can raise the issue and who cannot, there's no hard and fast rule. But the conscience keepers within the community (both from the oppressed and oppressing sections i.e. women and men respectively) enjoy better credibility to raise the issue. If you are one of them, hats off to you for highlighting this issue. The rest are better off staying away, especially since there are too many eager souls to fish in troubled waters.

 
At Tue May 10, 03:28:00 PM 2005, Anonymous Anonymous said...

**அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது.**

V.O.W,

You said the right thing. Nandalala can write about the status of women in hinduism. Islam is clear about the rights of muslim women. What hinduism has to offer to their women? Sati is not a muslim practice!

 
At Tue May 10, 05:28:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

//என்னை ஆதிக்க வெறியனென்று அடையாளம் காட்டியதற்கு நன்றி :)//

உங்களை யார் என்று அடையாளம் காட்டுவதோ, உங்கள் மீதான தீர்ப்பை வாசிப்பதோ எனது நோக்கமுமல்ல, அதை நான் இங்கு செய்யவும் இல்லை.

//நிலமை மோசமாக இருந்தால் அவர்களே பொங்கியெழுவார்கள். அதுவரை, மற்றவர்கள் கொஞ்சம் விலகிக் இருந்தால் நல்லது எனப் படுகிறது. //

உங்களுக்கு பட்டதாக மேலே நீங்கள் சொன்னது, எனக்கு, ஏன் எவர்க்குமே ஒரு ஆதிக்க குரலாகத்தான் படும்.

//பொங்கியெழுகிறார்களென்றால் அதுவும் நன்றே. எழுந்து ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ச்சியடையட்டும், பெறக் கூடிய உரிமைகளைப் பெறட்டும். இன்றளவில் ஏதோ அரசல் புரசலாக ஆங்காங்கே சில ஓசைகள் மட்டுமே கேட்கின்றன. அவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு என்னால் இயலாது.//

இப்படியான சிறு சிறு அக்னிகுஞ்சுகள் தான் பின்னர் காட்டை அழிக்கும். இதை வெறும் ஓசையாக மட்டுமே நினைத்துக்கொள்ள உங்கள் மனம் விரும்பி, அப்படியே நீங்கள் நினைத்துக்கொள்வதை யார் என்ன செய்ய முடியும்?

இஸ்லாமிய பெண்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக நம்பும் உங்களுக்கு, இந்து பெண்களைவிட அதிக உரிமையுள்ளது என்ற தகுதியே இஸ்லாமிய பெண்களுக்கு போதும் என்று நினைக்கும் உங்களுக்கு, உண்மை தெறியாமல் போவதில், எனக்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

//Regarding who can raise the issue and who cannot, there's no hard and fast rule. But the conscience keepers within the community (both from the oppressed and oppressing sections i.e. women and men respectively) enjoy better credibility to raise the issue. If you are one of them, hats off to you for highlighting this issue.//

உங்கள் 'கான்ஸியஸ் கீப்பர்கள்' யார் எந்த வகையென்பது புரிகிறது.
இஸ்லாமிய ஆண்கள் & பெண்கள் தவிர மற்றவர்கள் இதில் தலையிட கூடாது என்பது நியாமாக படுபவர்களுக்கு என்ன கான்ஸியஸ் இருக்க முடியும் என்று தெளிவு படுத்தினால் நல்லது!
நான் அவர்களில் ஒன்றாக இல்லையென்பதால் எனக்கு எப்படி தகுதிக்குறைவு ஏற்படுகிறது என்பதையும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

//The rest are better off staying away, especially since there are too many eager souls to fish in troubled waters//

குறையை தன்னுள் வைத்துக்கொண்டு, அதை நீடிக்க நினைத்து, குறைகளை சுட்டுபவரின் உள் நோக்கம் குறித்து பேசுவது, திசைதிறுப்பல் அல்லாத்ய் வேறு என்ன?

ஒடுக்குபவனும், ஒடுக்கப்பட்டவனும் தவிர மற்றவர்களை விலகி இருக்க சொல்வது ஆதிக்க வெறி இல்லை என்றால் வேறு என்ன என்பதையும் சொல்லுங்கள்.

 
At Tue May 10, 05:35:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

மிக்க நன்றி Anonymuos.

//Islam is clear about the rights of muslim women.//
சரியாக சொன்னீர்கள். இஸ்லாம் பெண்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியே வந்துள்ளது, மிகத் தெளிவாகவே.

//Nandalala can write about the status of women in hinduism.What hinduism has to offer to their women?
அது பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன். கூடிய விரைவில் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.

//Sati is not a muslim practice! //
தகவலுக்கு மீண்டும் நன்றி அனானிமஸ்.

 
At Tue May 10, 08:19:00 PM 2005, Blogger Voice on Wings said...

நந்தலாலா, 'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் மற்றவர் அதில் தலையிட்டு என்ன சாதித்துவிட முடியும்? சதாம் உசேன் ஆட்சியில் மனித உரிமை நிலவரம் சரியில்லையென்று அமெரிக்கா உள்ளே புகுந்த கதைதான்.

இஸ்லாமில் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிற்போக்குகள் இந்துமதத்திலும் ஏகத்துக்கு இருக்கின்றன. நாட்டில் உள்ள 80 - 85% பெண்களின் நிலையை விட்டுவிட்டு முதலில் 10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ (அதுவும் முன்னவர்களின் நிலை பின்னவர்களை விட மோசமென்று நீங்களே ஒப்புக்கொண்டபின்)?

Conscience Keeperஆகும் தகுதி ஏன் உங்களுக்கு இல்லயென்ற கேள்விக்கு விடை 'conscience' என்ற சொல்லின் பொருளிலுள்ளது. Outsiderஆக இருந்து கொண்டு எவ்வாறு உங்களால் இஸ்லாத்தின் மனசாட்சியாக செயல்படமுடியும்? உள்ளிருந்து கொண்டு "நம் வீடு சரியில்லை"யென்று கூறுவதெப்படி, வெளியிலிருந்து "உங்கள் வீட்டைப்போலொரு அவலத்தைக் கண்டதில்லை"யெனக் குற்றம் சாட்டுவதெப்படி? (இரண்டாமவருக்குக் கிடைக்கும் விடை என்னவாக இருக்குமென்று ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். )

I'm not denying that there is injustice in the case of Muslim women or Hindu women as well. (And I disagree with your statement - "இஸ்லாமிய பெண்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக நம்பும் உங்களுக்கு,") But my thinking is that they themselves are best positioned to sort out their problems without external interventions. Let them come out in force and fight for their rights. At best we can keep the conscience for our own communities and that is the best we can do to help their cause.

 
At Wed May 11, 06:52:00 AM 2005, Blogger மாமன்னன் said...

இஸ்லாம் என்ற "இனிய மார்க்கத்தில்" ஆண்களுக்கே சுதந்திரம் கிடையாது. இங்கு பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்!

எந்த இஸ்லாமிய நாட்டில் முஸ்லீம் ஆண்களுக்கு கூட, சுதந்திரமாக இஸ்லாத்தையோ வேறொரு மார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்று சொல்லுங்கள் நண்பர்களே!

Ennamo poongal

ஆரோக்கியம்

 
At Wed May 11, 10:34:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

Voice of wings,
//நந்தலாலா, 'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில்//

நல்ல கற்பனை, நகைச்சுவையும் கூட.

//இஸ்லாமில் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிற்போக்குகள் இந்துமதத்திலும் ஏகத்துக்கு இருக்கின்றன. நாட்டில் உள்ள 80 - 85% பெண்களின் நிலையை விட்டுவிட்டு முதலில் 10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ (அதுவும் முன்னவர்களின் நிலை பின்னவர்களை விட மோசமென்று நீங்களே ஒப்புக்கொண்டபின்)?//

இந்துமதம் பிற்போக்கானது என்பதால் தான், இஸ்லாமும் பிற்போக்கான ஒன்றாய் ஆனதா?
குரான், ரிக் வேத அடிப்படை கொண்டதா?
இந்து மதம் முற்போக்காக மாறும் வரை இஸ்லாம் மாற்றங்களை ஏற்காதா?
இஸ்லாம் சுயமற்ற, இந்து மதம் சார்ந்த இயக்கத்தை மட்டுமே கொண்டதா?

இதற்கு உங்கள் பதில் 'ஆம்' எனில், நானும் தவறிழைத்ததாக ஒப்புக்கொள்கிறேன்.

//எவ்வாறு உங்களால் இஸ்லாத்தின் மனசாட்சியாக செயல்படமுடியும்?//

எனக்கு அப்படிப்பட்ட தேவை இல்லை. நான் பேசுவது மனிதமே. மனிதத்திற்கு மதங்கள் எல்லையாகாது என்பது என் புரிதல்.

//உள்ளிருந்து கொண்டு "நம் வீடு சரியில்லை"யென்று கூறுவதெப்படி, வெளியிலிருந்து "உங்கள் வீட்டைப்போலொரு அவலத்தைக் கண்டதில்லை"யெனக் குற்றம் சாட்டுவதெப்படி?//

கொல்லப்பட்டவன் குற்றம் சாட்டினால் தான் கொலை செய்தவனை தண்டிக்க முடியும் என்பது தான் உங்கள் நீதியெனில், அங்கே நீங்கள் சொல்லியது தான் சரி. வெளியிலிருப்பவர், அல்லது பாதிக்கப்படாதவர் வாய்மூடித்தானிருக்க வேண்டும்.

மற்றபடி ஆதிக்கம் காக்கும் நிலையே உங்களின் தொடர்ந்த பின்னூட்டங்களில் காணப்படுகிறது.

தங்களை முற்போக்குவாதிகளாக நினைத்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் பலர், மதம் என்றவுடன் முக்காடிட்டுக்கொள்வது வழமையே.

 
At Wed May 11, 10:50:00 AM 2005, Blogger ~Nandalala~ said...

voice of wings,

//சதாம் உசேன் ஆட்சியில் மனித உரிமை நிலவரம் சரியில்லையென்று அமெரிக்கா உள்ளே புகுந்த கதைதான்.//

இராக்கியர்கள் இப்போது தான் சந்தோசமாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
இராக்கில் பெரிய எதிர்ப்பு ஒன்றும் இல்லையென்றும், அங்கே நடப்பது சிறு சலனம் என்றே அமெரிக்கா கூறுகிறது.

அனால், இதை நீங்கள் (நானும் தான்) ஏற்க மாட்டீர்கள்.

அமெரிக்கரோ, இராக்கியரோ அல்லாத ஒருவர் இது பற்றி விவாதிப்பதை ஒரு குற்றமாக காண மாட்டீர்கள். நீங்களே அமெரிக்காவை திட்டி தீர்ப்பீர்கள்.

அமெரிக்காவை குற்றஞ்சாட்டினால் கை தட்டுவீர்கள்.

காரணம் பாதிக்கப்படும் இராக் ஒரு இஸ்லாமிய நாடு. அதற்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் நியாயம் கேட்கலாம்.

இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி யாராவது வருத்தப்பட்டால் மட்டும் 'நீ யார் இதை கேட்க?' என்ற கேள்வியுடன்
//10 - 12% உள்ளவர்களின் நிலையைத் தொட்டதன் காரணமென்னவோ// என்று உள் நோக்கத்தை சந்தேகிப்பீர்கள். காரணம் இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமிய அடிப்படைவாதம்.

உங்கள் நியாய நிலைப்பாடு புல்லரிக்கிறதய்யா.

 
At Wed May 11, 11:44:00 AM 2005, Blogger Voice on Wings said...

நந்தலாலா, நேரமின்மையால் என்னால் விரிவாக விடையளிக்க முடியவில்லை. சுருக்கமாக, முடிந்த அளவு தெளிவாக விடையளிக்க முயற்சிக்கிறேன்.

முதலில், அமெரிக்கா - ஈராக் பிரச்சனை. சச்சரவு நிலை இருப்பது அனைவருக்கும் தெளிவு. நிச்சயமாக ஈராக்கின் sovereignity மீறப்பட்டிருக்கிறது. ஆகவே, என் கண்டனங்களும் அமெரிக்காவுக்கு உண்டு. ஈராக் இஸ்லாமிய நாடு என்பதற்காக அல்ல. Btw, it was one of the world's few secular nations having a Muslim majority and was not an Islamic nation.

இரண்டாவது, நான் ஒரு இஸ்லாமியன் கிடையாது, ஆகவே எந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ / பிற்போக்கையோ / ஆட்சியையோ / நாட்டையோ ஆதரிக்கும் தேவை எனக்குக் கிடையாது.

'சந்தோஷமாக' இருக்கிறார்கள் என்று பாதி நகைச்சுவையோடுதான் கூறினேன், இருந்தும் கற்பனையாக அல்ல. "ஒடுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள்!" எனும் குரல்கள், "ஒடுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம்" எனும் குரல்களை விட வலுவாவாக ஒலிப்பதேன் என்ற எனது நியாயமான ஐயத்தை இங்கு்கு வெளிப்படுத்தினேன். மேலும் உங்கள் பதிவிலிருந்த சில பிழைகளை சுட்டிக்காட்டினேன். இதனால், நான் ஒரு ஆதிக்கவாதி என்று நீங்கள் கருதுவீர்களானால் அதுவும் நலமே.

கொலை / கொள்ளை பற்றி கேட்டிருந்தீர். Civil code / Criminal code என்று இருவகை சட்டம் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கொலை / கொள்ளை ஆகியவை criminal வகை. நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயங்கள் civil வகை.

பெரும்பாலோரின் அவலத்தை விட்டு, சிறுபான்மையினரின் நிலை குறித்து (அவர்களே பெரிதாக கவலைப்படாத நிலையில்) பூதக் கண்ணாடி கொண்டு் பார்த்து விட்டு நீங்கள் படும் வருத்தத்தின் காரணமென்ன என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை, என்றுமே விளங்காது போகலாம்.

 
At Wed May 11, 03:17:00 PM 2005, Anonymous பரதன் said...

இந்து மதத்தை குத்தம் சொல்றவங்க எல்லாம் இப்ப வாயும் அதையும் மூடிக்கிட்டு இருக்காங்கல்லா அது தான் மதசார்பின்மை.என்னா சரிதானா மக்களே?

 
At Wed May 11, 04:28:00 PM 2005, Anonymous Anonymous said...

இந்து மதத்தில் கண்டிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு இதை எழுதுகிறேன்.

"சதி"யை ஒழிக்க சட்டம் வந்து,அதை அனைவரும் ஏற்றுக்கொண்டாகி விட்டது.

தீண்டாமையும் சட்டத்தின் மூலம் குறைந்துள்ளது.

இதையெல்லாம் காலத்தின் கட்டாயமாக இந்துக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

முஸ்லீம் சகோதர, ச்கோதரிகள் மட்டும் மாற்றத்தை ஏற்காமல் பிடிவாதமாக இருப்பது ஏன்?

எனது கல்லூரி தோழி ஒருத்தி, நாங்கள் ஒன்றாக கல்லூரியில் படிக்கும் போது எல்லோரையும் போலவே உடை உடடுத்தி வருவார்.

இப்போது ஒரு அழுவலகத்தில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும்போது கறுப்பு மேலாடை அனிந்து முழுசாக மறைத்து கொண்டு செல்கிறார். நான் கேட்டதர்க்கு, "என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்கிறார்.

வேலைக்கு போகும் நிறய இந்து பென்கள் பொட்டு, தாலி இல்லமலே கூட செல்கின்றனர்.

முஸ்லீம்கள் Mஅற வேண்டும். அதை மற்றவர்கள் சொல்வது சரியா என்பது எனக்கு தெரியவில்லை. நான் எழுதியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
லோகி.

 
At Wed May 11, 04:43:00 PM 2005, Blogger BABU said...

//இஸ்லாமிய சட்டங்களின் படி சரியானதாக இருக்கக்கூடும்.
ஆனால் நடைமுறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதே உண்மை//

உண்மை!
இஸ்லாம் பெண்களை அடக்கி வைக்கிறது என்று சொல்லாமல் முஸ்லிம் ஆண்கள் அடக்கி வைக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.
உதாரணத்துக்கு, இஸ்லாமிய சட்டப்படி ஆண்கள் தான் பெண்ணுக்கு தட்சணைத் தந்து மணம் முடித்துக் கொள்ளவேண்டும்.அப்படி அவர்கள் சரியாக நடந்துக் கொன்டால், முன்கூட்டியே 'மஹர்' தொகைப்பெற்றுக்கொள்கிற பெண், அப்புறம் ஆண் முத்தலாக் என்ன, ஆயிரம் தலாக் சொன்னாலும் கவலையில்லை என்று போய்விடுவாள். ஏன், அந்த ஆணுடன் வாழப் பிடிக்காத பட்சத்தில், பொருளாதார சுதந்திரத்தை கருத்தில் கொண்டு அவளே 'தலாக்' சொல்லி விடுவாள். (அதற்கும் அனுமதி உண்டு).

(மேலும், இஸ்லாமிய போதனை பிரகாரம், மனைவி சம்பாதித்து செலவுச்செய்வதில் கணவன் உரிமை எடுக்க முடியாது என்பதும் கவனிக்க வேண்டியது).

ஆனால், இந்தியாவில் மற்றவர்களின் கலாச்சாரத்துக்கொப்ப 'வரதட்சணை' வாங்குகிற ஆண்கள் தான் முஸ்லிம்களிலும் நிறைய! அது தான் பிரசினையே!

நான் சொல்ல வருவது, பெண்ணுக்கு 'மஹர்' கொடுக்க வேண்டுமே தவிர நீ (ஆண்) அவளிடமிருந்து வரதட்சணை வாங்கக்கூடாது என்ற போதனையை இந்த முஸ்லிம் ஆண்கள் எதிர்மறையாக கடைப்பிடிப்பதால் தான் இஸ்லாமே பெண்ணை அடக்கி வைக்கிறது போல பேச்சு.

 
At Wed May 11, 06:02:00 PM 2005, Anonymous Anonymous said...

oru talit sangaraacaari aagumboodu muslim peNgkaL vidutalai adaivaarkaL aakavee naNbarkalee, udanadiyaaka oru dalitai sangarachaari aakkungkal.

 
At Wed May 11, 06:46:00 PM 2005, Anonymous Anonymous said...

//இப்போது ஒரு அழுவலகத்தில் வேலை பார்க்கிறார். வேலைக்கு போகும்போது கறுப்பு மேலாடை அனிந்து முழுசாக மறைத்து கொண்டு செல்கிறார். நான் கேட்டதர்க்கு, "என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்கிறார்.//

Did they reduce her salary for this reason? Did she lose anything because of it? only one thing is the lusty sights of b.males.

It is better to leave her as she and her husband's wish. Let us not impose any of our //wishes// on her.

Atleast to avoid onemore sarikasha!
- Aarooran

 
At Wed May 11, 06:50:00 PM 2005, Anonymous Anonymous said...

ஒரு தலித் சங்கராச்சாரி ஆகும் போது முஸ்லிம் பெண்கள் விடுதலை அடைவார்கள். ஆகவே நண்பர்களே, உடனடியாக ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்குங்கள்.

மேலே ஒரு அனானிமஸ் அண்ணன் இங்கிலீஸ்ல போட்டதை தமிழ்ல தட்டி போட்டிருக்கேன். ஏதோ நம்மால ஆனது.

-அனானிமஸ் தம்பி.

 
At Wed May 11, 07:40:00 PM 2005, Anonymous Anonymous said...

மெஹர் என்பது வெறும் சடங்கு. வரதட்சணை கொடுமை இஸ்லாமில் தலைவிரித்து ஆடுகிறது. கணவன் மனைவியை தலாக் செய்யலாம், மனைவி செய்ய முடியாதாமே? ஆனால் அனைத்து சமூகத்திலும், நாட்டிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களே.

 
At Wed May 11, 08:11:00 PM 2005, Anonymous Anonymous said...

அய்யா ஆரூராரே,
//the lusty sights of b.males.//
அல்லா படைத்த எல்லா ஆண்களுமே lusty sights கொண்ட b.males தானா?

//It is better to leave her as she and her husband's wish.//
"என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்று சொல்லுவதிலேயே தெரியுதே அந்தம்மாவுக்கு இதுல விருப்பமில்ல, கணவர்தான் கட்டாயப்படுத்துரார்னு.
விருப்பமில்லாமல் மற்றவர் கட்டாயத்துக்காக செய்யிறத அல்லா ஏத்துக்குவாரா?
தலாக் இருக்கட்டும்யா டிரஸ்ல கூடவா?
என்னத்த நான் சொல்றது?
-கோவூரான்.

 
At Thu May 12, 02:54:00 PM 2005, Anonymous Anonymous said...

அய்யா கோவூராரே!

//அல்லா படைத்த எல்லா ஆண்களுமே lusty sights கொண்ட b.males தானா?//

எல்லோரும் lusty sights இல்லை. b.males மட்டுமே!
சரிகா ஷாக்களிடம் கேட்டுப்பாருங்களேன்.நன்றாக விளக்குவார்கள்.

//
"என் கனவ்ர் கன்டிப்பானவர், அவர் சொல்வதை என்னால் மீற முடியாது" என்று சொல்லுவதிலேயே தெரியுதே அந்தம்மாவுக்கு இதுல விருப்பமில்ல, கணவர்தான் கட்டாயப்படுத்துரார்னு.//

ஆரூரானுக்கும் கோவூராருக்கும் அந்தப் பெண் மீது இருக்கிற உரிமையை விட கணவனுக்குத்தானே அதிக உரிமை. அப்படியும் கணவன் தன் மீது உரிமை எடுப்பதை விரும்பாத பெண்ணுக்கு அவளே கணவனை -குலா- தலாக்கின் பெண்மொழி சொல்லித் தள்ளி வைக்கவும் அனுமதி இருக்கிறது.
அதுவும் இஸ்லாமிய முறைப்படி மஹர் வாங்கி கல்யானம் செய்துக்கொண்ட பெண்ணயிருந்து விட்டால் 'எதிர்காலப் பொருளாதரத்தைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

சகொதரி லோகி,

//சதி"யை ஒழிக்க சட்டம் வந்து,அதை அனைவரும் ஏற்றுக்கொண்டாகி விட்டது.

தீண்டாமையும் சட்டத்தின் மூலம் குறைந்துள்ளது.

இதையெல்லாம் காலத்தின் கட்டாயமாக இந்துக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.//

இஸ்லாத்தைப் பொருத்தவரை புதிதாக சட்டங்கள் கொண்டுவரத்தேவைப்படாத அளவுக்கு,ஏர்கனவே சட்டங்கள் உள்ளன.'பெண்ணுக்கு மஹர் கொடுத்துத் தான் செய்ய வேண்டும்' என்று.

முஸ்லிம்களை அவர்களுடைய சட்டத்தை முறையாகப் பின்பற்றும்படி நாம் சொல்லுவதே பொதும்-இத்தகையப் பிரட்ச்னைகளுக்கு முடிவு கட்ட!

வேண்டுமானால் மஹர் தந்து கல்யானம் செய்யாத - வரதட்சணை வாங்குகிற முஸ்லிம் ஆண்களுக்கு தலாக் செய்யவும் உரிமையில்லை என்பதை உணர்த்தலாம்.
- Aarooran.

 
At Thu May 12, 05:35:00 PM 2005, Anonymous Anonymous said...

அன்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கலாமா? கூடாதா?

 
At Thu May 12, 06:38:00 PM 2005, Anonymous Anonymous said...

//'ஒடுக்குபவனும்' 'ஒடுக்கப்படுபவளும்' சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் மற்றவர் அதில் தலையிட்டு என்ன சாதித்துவிட முடியும்?//

V.O.W அண்ணாச்சிதா அப்டி சொல்றாருல்லா, பின்ன ஏம்லே அலட்டிக்கிறவோ? பேசாத போங்களே.

 
At Thu May 12, 08:08:00 PM 2005, Anonymous Anonymous said...

//அன்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கலாமா? கூடாதா?//
இந்துக்களை விமர்சிக்க மட்டும் யார் பெர்மிஸனும் தெவையில்ல. இஸ்லாத்தை விமர்சிக்க மட்டும் விசா வாங்கனுமோ?
வாழ்க இந்தியாவின் மதச்சார்பின்மை.

 
At Thu May 12, 10:03:00 PM 2005, Anonymous Anonymous said...

அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.
இஸ்லாம் பற்றி, இஸ்லாம் அல்லாதோர் விவாதிப்பது கூடாது என அண்ணல் நபியவர்களாலோ, 'திருக்குரான்'ல் உள்ள ஒரு இறை வசனத்தினாலோ தடுக்கப்பட்டுள்ளதா?

தயவு செய்து இஸ்லாமிய நெறிகளை அறிந்தவர்கள் பதிலிருக்கவும்.
புதியவன்.

 
At Thu May 12, 10:57:00 PM 2005, Anonymous Anonymous said...

தடுக்கப்பட்டதா இல்லையா என்பது இருக்கட்டும்.
மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரீகமா என சொல்லுங்கள்.

 
At Thu May 12, 11:26:00 PM 2005, Anonymous Anonymous said...

இது உள்விவகரமா, நாகரீகமா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றவர்கள் தலையீடு பற்றி, நபி அவர்களின் கருத்து, திருக்குரான் வழிகாட்டுதல் என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.
யாரவது விளக்க முடியுமா?
புதியவன்.

 
At Fri May 13, 10:51:00 AM 2005, Anonymous Anonymous said...

மதத்தின் பெயரால் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது எந்த மதத்திலிருந்தாலும் கண்டிக்கப்படுவேண்டியது தான். என்னைப்பொறுத்தவரை இது இஸ்லாமிய சமூகத்தில் மிக மிக அதிகம். உடைகளிலுருந்து அத்தனையிலும் ஆணாதிக்கமே. சரிகாஷா விவகாரத்தை இதில் இழுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இங்கே குறிப்பிட்டிருப்பதை பார்த்தால் ஏதோ பெண்கள் ஆபாச உடை அணிந்து அது ஆண்களை தூண்டி அதுவே பிரச்சினைக்கு காரணம் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபாச எண்ணோத்தோடு பார்க்கும் ஆடவர்களை கண்டிக்காமல் பெண்டிரை முழுவதும் போர்த்திக்கொண்டு வா என்பது ஆணாதிக்க சமுதாயத்தின் அசிங்கமான வெளிப்பாடு.

-தெருப்பாடகன்-

தவறு எங்கிருந்தாலும், உரிமை மீறல் எங்கிருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான், இதற்கு இந்துவாகவீ, இசுலாமியராகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

பெண்கள் பொங்கியெழும் அளவுக்கு இசுலாமிய சமூகத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா? இசுலாமிய சமூகத்தில் எத்தனை பெண்கள் படிப்பறிவோடு சொந்த காலில் நிற்கின்றனர் எண்ணிக்கை அதிகமில்லையே, இந்த நிலையில் எப்படி அவர்கள் உரத்து குரல் கொடுப்பது.

 
At Fri May 13, 07:47:00 PM 2005, Blogger அபூ முஹை said...

/*அறிந்து கொள்ளவே கேட்கிறேன்.
இஸ்லாம் பற்றி, இஸ்லாம் அல்லாதோர் விவாதிப்பது கூடாது என அண்ணல் நபியவர்களாலோ, 'திருக்குரான்'ல் உள்ள ஒரு இறை வசனத்தினாலோ தடுக்கப்பட்டுள்ளதா?

தயவு செய்து இஸ்லாமிய நெறிகளை அறிந்தவர்கள் பதிலிருக்கவும்.
புதியவன்.*//

இஸ்லாத்தை எவர் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், விமர்சனம் உண்மையாகவும் - நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்குப் பார்க்க..
http://abumuhai.blogspot.com/2005/05/1.html

 
At Fri May 13, 08:21:00 PM 2005, Blogger புதியவன் said...

விளக்கத்துக்கு நன்றி அபூ முஹை.

 
At Fri May 13, 08:42:00 PM 2005, Anonymous Anonymous said...

நந்தலாலா,
ஆழமான, விளக்கங்களுடன் உள்ள கட்டுரை.நேர்மையாக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை மத அடிப்படைவாதிகளால் நேரடியாக எதிர்கொள்ள முடியாது.

 
At Sun May 15, 01:28:00 PM 2005, Blogger Voice on Wings said...

Reply to your latest post. (Comment feature is not working there) :

நந்தலாலா, மறுபடி உங்கள் பழைய 'தலாக்' விவாதத்தை தொடர்ந்துள்ளீர். அதிலும், 'பெரும்பாலோர்' என்று குறிப்பிட்டு என் நிலைபாட்டினை விமர்சித்துள்ளதால் இந்த விளக்கத்தை அளிப்பது தேவையென்று நினைக்கிறேன்.

எனது பின்னூட்டங்களின் எண்ணம் உங்களுக்கு நீதி போதிப்பதல்ல. இஸ்லாம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு மாற்று கருத்தை முன்வைப்பதே என் நோக்கம். "தலையிடலாமா, வேண்டாமா" என்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்யக் கூடிய ஒன்றல்ல இது. உடைகளைக் களைவது, குடும்பத்தார் மானபங்கப் படுத்துவது, சிகரட் நெருப்பால் மார்பகத்தை சுடுவது போன்ற பெண்ணுக்கெதிரான குற்றங்களை / வன்முறைகளை கண்டிப்பாக தலையிட்டு பாதிக்கப் பட்டவரைக் காத்தல் நன்நெறி பின்பற்றும் அனைவரின் கடமையாகும். இவ்விஷயங்களில் நீங்கள் கூறுவதோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன்.

உங்களுடன் மாறுபடுவது நீங்கள் சென்ற பதிவில் இஸ்லாம் மதத்துக்கெதிராக அளித்த தீர்ப்பை - அது பிற்போக்கான, பெண்ணுரிமை மறுக்கும் ஒரு மதமே என்று நீங்கள் எடுத்த முடிவை. "கண்ணாடியறையிலிருப்பவர் கல்லெறியக்கூடாது" என்று கூறுவதைப்போல், எல்லா மதத்திலும் பெண்ணுக்குப் பாதகமான அம்சங்கள் இருக்கையில் இஸ்லாம் ஏதோ மற்றதுகளை விஞ்சும் ஒருவகையென சித்தரித்திருந்தது என்னை மறுமொழியிடத் தூண்டியது. உண்மையிலேயே அது அத்தகைய ஒன்றா என்ற கேள்வியும் சேர்ந்துகொண்டது. எனவே, (so-called) பாதிக்கப் பட்டவரை விட மற்றவர்கள் எழுப்பும் இந்த ஓசையின் காரணமென்ன என்ற ஐயமும் எழுந்தது.

"அநீதியை, பாதிக்கப் பட்டவரைத் தவிர மற்றவர்கள் எதிர்க்கக் கூடாது" என்று நானோ மற்றவரோ 'போதித்ததாக' நீங்கள் திரித்துக் கூறுவது வருத்தமளிக்ககிறது.

 
At Sun May 15, 03:07:00 PM 2005, Blogger அபூ முஹை said...

//*மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்து::தலாக்::*//

நந்தலாலா, மொட்டையடித்து, நிர்வாணப்படுத்திய.. பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை அதை இங்கே வைக்கிறேன், நன்றி

உங்கள் பதிவில் எழுதியுள்ள வன்கொடுமை மிக வன்மையாக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தலைப்பில் ''தலாக்'' என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளீர்கள், இது எந்த அளவுக்கும் இந்தப் பதிவோடு பொருத்த முடியும் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அநீதி இழைக்கப்பட்டப் பெண்ணுக்கு திருமணம் நடந்து விட்டதாக, நீங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. திருமணமாகாதப் பெண்ணுக்கு ''தலாக்'' எப்படி விளக்க முடியுமா?

 
At Sun May 15, 03:40:00 PM 2005, Blogger சுட்டுவிரல் said...

அன்புள்ள நந்தலாலா!

பெண்கள் மீதான வன்கொடுமைகள் பற்றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பதிவுகள் பாராட்டத்தக்கன.
நீங்கள் ஒரு சீக்கியப் பெண்ணையோ ராஜ்புத் பெண்ணையோ குறித்து எழுதும் போது அது ஒரு சமூகக் கொடுமையாகவே அணைவராலும் கருதப்படுகிறது.(அங்கு அந்தப் பெண்ணின் மதம் விமர்சிக்கப்படுவதில்லை). ஆனால் ஒரு முஸ்லிம் பெண்னின் பாதிப்பை எழுதும்போது தான் 'இஸ்லாமே தவறானது' எங்கிற தொனியுடன் பின்னூட்டங்கள் வருகின்றன. 'தலாக்' பற்றிய இப்பதிவில் பரிவார வாடை சுமந்து வந்த பின்னூட்டங்களும் அதற்கு எதிர்வினை என்ற பெயரில் உணர்ச்சி வசப்பட்ட சில பின்னூட்டங்களும் வந்துள்ளதைக் காணலாம்.


பர்த குறித்த ஒரு பின்னூட்டத்தில் முஸ்லிம் பெண்ணின் பர்தா பற்றி பேசும் போதே அந்தப்பெண் வேலைக்குச் செல்வதற்கு 'பர்த' ஒரு தடையாக இருக்கவில்லை என்பதும் புலப்பட்டது. மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!
நன்றி. - சுட்டுவிரல்

 
At Mon May 16, 09:53:00 AM 2005, Blogger Abu Umar said...

அன்பின் நந்தலாலா,
எனது கீழ்கண்ட பதிவை பார்வையிடவும். செய்திகள் நீளமாகிவிட்ட காரணத்தினால் தனிப்பதிவு இடவேண்டிய சூழ்நிலையாகிவிட்டது. வருத்தம் வேண்டாம்.

http://nihalvu.blogspot.com/2005/05/blog-post.html

 
At Mon May 16, 11:59:00 AM 2005, Blogger ஜோ / Joe said...

//மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!//
அந்த பெண் அணிய தேவையில்லை என்று நினைத்தாலும் அவர் கணவர் விட்டு விடுவாரா?...ம்...அதை அவர் கணவரிடமே விட்டுவிடலாமே?...அட போங்கப்பா..

 
At Tue May 17, 11:05:00 AM 2005, Blogger ROSAVASANTH said...

அன்புள்ள நந்தலாலா,

வேலை மற்றும் குடும்ப அழுந்தங்கள் காரணமாய் வலைப்பதிவு விவாதங்களில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்களின் இந்த குறிப்பிட்ட மற்றும் இதை தொடர்ந்த பதிவுகளுக்கும் என் ஆதரவை தர மட்டுமே இதை எழுதுகிறேன். இதை முக்கியமாய் நினைத்து செய்ய காரணம் பொதுவாய் முற்போக்கு என்று சொல்லி கொள்பவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனத்தை செய்ய தயங்குவதும், அந்த வேலையை இந்துத்வ சார்புடையவர்கள் மட்டுமே செய்யும் அவலம் காரணமாகவும், உங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதை முக்கியமானதாய் நினைக்கிறேன்.

நேசக்குமாருடன் எனக்கு பெரிய அளவில் உடன்பாடுகள் கிடையாது என்றாலும் அவர் இஸ்லாம் குறித்து ஒரு விவாதத்தை தொடக்கியபோது என் ஆதரவை தெரிவித்தேன். அவரை விட உங்களுடன் பெருமளவில் உடன்படுகிறேன். நான் சொல்லும் முறையும் வார்த்தைகளும் வேறுபடுமே தவிர கிட்டதட்ட நீங்கள் உங்களுடன் முற்றிலுமே உடன்படுகிறேன். இஸ்லாம் மீதான விமர்சனபூர்வமான பார்வையின்மை இந்துத்வத்திற்கு உதவுமே தவிர எந்தவிதத்திலும் எதிர்க்க உதவாது. அதற்கான தார்மீகத்தையும் சந்தேகத்திற்குள்ளாக்கும். அந்த வகையில் ஒரு இந்துத்வவாதியில்லாத உங்கள் பார்வைக்கான ஆதரவை தர மட்டுமே இந்த பின்னூட்டம். சில மாதங்களில் என் கருத்துகளை விரிவாய் எழுத உத்தேசமுள்ளது. நன்றி.
(உங்கள் அடுத்த பதிவு காணாமல் போய்விட்டது. நீண்ட தலைப்பு வைக்காதீர்கள்.)

 
At Tue May 17, 02:35:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

புதியவன், பாபு, ஆரோக்கியம், பரதன், லோகி, ஆரூரான், கோரூரான், VOW, சுட்டுவிரல், ஜோ, anonymousகள், அபுமுகை, அனைவருக்கும் நன்றி.

உங்கலின் கேள்விகளுக்கு பதிலிருக்க தாமதாகும். நேரப்பற்றாக்குறையே காரணம்.

புதிய பதிவில் இது குறித்து எழுதியுள்ளேன்.
நன்றி.

 
At Tue May 17, 02:42:00 PM 2005, Blogger ~Nandalala~ said...

ரோசாவசந்த்,
வந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நீங்கள் சொல்லியிருப்பதுடன் உடன் படுகிறேன்.

இரண்டு விளிம்புக்கும் இடைப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிப்பது முக்கியம் என்றே நானும் நினைக்கிறேன்.

பெரும்பாலோனோர் ஏதோ தயக்கத்துடன் விலகியிருக்கும் சூழலில் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

விரைவில் உங்கள் கருத்தை பதியுங்கள்.

 
At Tue May 17, 06:02:00 PM 2005, Blogger சுட்டுவிரல் said...

இது ஜோவுக்கான பதில்:
//மற்றப்படி பர்தாவை அணிவதா வேண்டாமா என்பதை அந்தப் பெண்ணிடமே விட்டு விடலாம் தானே!//
அந்த பெண் அணிய தேவையில்லை என்று நினைத்தாலும் அவர் கணவர் விட்டு விடுவாரா?...ம்...அதை அவர் கணவரிடமே விட்டுவிடலாமே?...அட போங்கப்பா.. //

பர்தாவைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்துக்கொண்டு கருத்து சொல்வதாக கருத முடியவில்லை.
கண்ணியமான எந்த ஆடைக்கும் பர்தா என்று சொல்லலாம். அது கருப்பாகவோ (அ) வெள்ளையாகவோ த்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உதாரணம்: நமது முன்னாள் கவர்னர் ஃபாத்திமாபீவி அணிந்திருந்ததும் பர்தா தான். (அவருடைய பிற இஸ்லாமிய புரிந்துணர்வுகள் பற்றி நான் அறிய மாட்டேன்).

பர்தா என்பதன் நோக்கம் மறைக்கப்பட வேண்டிய அங்கங்கள் மறைக்கப்படவேண்டும் என்பதே. திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அணிந்திருந்ததும் பர்தாவை ஒத்த ஒரு ஆடையே!

மேலும், கணவன், மனைவி மீது உரிமை எடுப்பதிலும் அதேபோல மனைவி, கணவன் மீது உரிமை எடுப்பதிலும்-அவர்கள் அதை ஒருவருக்கொருவர் அனுமதித்துக்கொள்ளும் நிலையில் - கவனிக்க- ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுமதித்துக்கொள்ளும் நிலையில் - என்ன தவறு காண்கிறீர்கள்? (மூன்றாம் நபர்களான சுட்டுவிரலும் ஜோவும் தான் அவள் மீது கருத்துத் திணிப்பு செய்யக்கூடாது).

''அவர்கள் (பெண்கள்) மீது உங்களுக்கிருக்கும் உரிமைகளைப் போலவே உங்கள் (ஆண்கள்) மீதும் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன'' என்கிறது குர் ஆன்.

'புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன்' என்கிற பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாம் போதிக்கவில்லை என்பதையாவது உணருங்கள்.

 
At Wed May 18, 07:15:00 AM 2005, Blogger ஜோ / Joe said...

சுட்டுவிரல்,
பதிலுக்கு நன்றி.
பர்தா தரும் கண்ணியத்தை பற்றி நான் அறியாதவனல்ல .கத்தோலிக்க கன்னியர்கள் அணியும் உடை கூட அத்தகையது தான் .அதற்கான காரணங்கள் கூட இஸ்லா