Get Nandalaalaa atom feed here!

Saturday, October 08, 2005

பல்லாயிரம் உயிர்கள் பலி.

சமீபத்திய தகவல்கள்:
பாகிஸ்தான் பகுதி கஷ்மீரின் பூன்ச், பரமுல்லா, குப்வரா மற்றும் தலைநகர் முஜபராபாத் ஆகிய பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கிலானோர் உயிரிழந்திருக்க க்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய - பாக் அதிகார எல்லையோர உரி என்ற நகரின் வணிக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சேதக்கடுமைகளை அதிகரித்துள்ளது.

இந்திய கஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமுள்ளது. தற்போது 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இம்மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் உயிருக்கு போராடுவொர் குறித்து எந்த தகவலும் இல்லை.

பல சாலைகளில் மண் சரிவின் காரணமாக் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது, உதவிகள் வந்தடைவதை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் தனது அமைப்பினரை உடனடியாக களமிறக்கி முடிந்தவற்றை செய்து வருகிறது. செஞ்சிலுவை சங்கம 'உரி' யில் 1000 கூடாரங்கள் வரை அமைத்துள்ளனர் எனினும் இது போதுமானதல்ல எனவும்
மேலும் உதவிகள் தேவை என சர்வதேச தலைமையகத்தை கோரியுள்ளனர்.

ஆனால், இரண்டு நாட்டு அரசுகளுமே முழுமையாக களம் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்பது வருத்தத்திற்குறியது.

-------------------------------------------------

ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் பகுதிகளில் கடும் நிலநடுக்கம்.
ஆப்கான், பாக், இந்தியா, காஷ்மீர் ஆகிய தெற்காசிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது



இது ரிக்டர் அளவையில் 7.6 என்ற அளவில் கடுமையாதாக இருந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே அதிக கடுமையானது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வட கிழக்கே 80 கி.மீ தொலைவில் நில நடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. இதற்கு சுமார் 4 மணி நேரம் முன்னதாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவின் அக்சய் மாகாணத்தின் தென் பகுதியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானில் 1000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இஸ்லாமாபாத்தில் மட்டுமே மிகக்கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்திய காஷ்மீர் பகுதியின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இதுவரை வந்த தகவல்கள் 14 இந்திய இராணுவ வீரர்களும், குழந்தைகள் உள்ளிட்ட 20 நபர்கள் வரை இப்பேரிடருக்கு பலியானதாக கூறுகின்றன.

பூன்ச் மாவட்டத்தில் நீதிமன்ற கட்டடம் ஒன்றும், 200 ஆண்டுகால 'மோத்தி மகால்' என்ற கட்டிடமும் தரைமட்டமானதாக தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்:
உயிருக்கு போராட்டம் இடிபாடுகளுக்கிடையே...




------------------------
WILL UPDATE AS MORE INFO COMINGIN - KEEP CHECK.

4 Comments:

At Sat Oct 08, 07:00:00 PM 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் பாகிஸ்தானிய நண்பரின் வீடும் சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியப் பகுதிகளை விட பாக் பகுதிகளே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனத் தெரிகிறது. வெளிவரும் செய்திகள் மனதைக் கனக்கச் செய்கின்றன.

 
At Fri Nov 04, 12:28:00 AM 2005, Anonymous Anonymous said...

Well done on a great blog Blogger. I was searching for information on byzantine jewelry and came across your post பல்லாயிரம் உயிர்கள் பலி. - not exactly what I was looking for related to byzantine jewelry but very interesting all the same!

 
At Mon Feb 05, 06:37:00 PM 2007, Anonymous Anonymous said...

Where did you find it? Interesting read » »

 
At Sat Mar 03, 08:45:00 AM 2007, Anonymous Anonymous said...

What a great site http://www.hummers-2.info/saab-cms80-1.html Washington national jackets New york online advertising South hills chrysler jeep Effects+side+zithromax Food that&aposs good for nummular eczema Reunion airfare zoloft side effects myoclonus Ralph klein pimple ass elephants projector retrofit Vardenafil hydrochloride prescriptoion medicine In online usa viagra Backpacking and hiking outfitters Buy order neurontin online

 

Post a Comment

<< Home